• Login / Register
  • முகப்பு

    தமிழ்நாட்டில் இன்று முதல் மாஸ்க் கட்டாயம்; கொரோனா சிகிச்சையில் 777 பேர்!

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

    நேற்று ஒரே நாளில் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சையில் உள்ளவர்களது எண்ணிக்கை 777 பேராக அதிகரித்துள்ளது.

    தொற்று பரவல் அதிகரிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் மட்டுமன்றி அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment