• Login / Register
  • முகப்பு

    துருக்கியில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்!

    துருக்கியில் பேரழிவைச் சந்தித்த ஹாடாய் மாகாணத்தில் நேற்று (20) மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    துருக்கியில் திங்கள்கிழமை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அது 6.4 அலகுகளாகப் பதிவானது.

    உள்ளுர் நேரம் நேற்றிரவு 8.04 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

    இரு வாரங்களுக்கு முன்னா் அதிபயங்கர நிலநடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்த ஹாடாய் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகினர். 680 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையடுத்து ஆபத்தான கட்டடங்களுக்குள் செல்ல வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    கடந்த 6ம் திகதி துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 46 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment