• Login / Register
  • விளையாட்டு

    பத்திரணவுக்கு இலங்கை அணியில் இடம்!

    நடைபெற்று முடிவடைந்த ஐபிஎல்-2023 தொடரில் முத்திரை பதித்து கவனத்தை ஈர்ந்த வீரர்களில் ஒருவரான இலங்கை வீரர் மதீஷ பத்திரணவுக்கு தேசிய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

    தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முன்னணி பந்துவீச்சாளராக வலம்வந்த மதீஷ பத்திரண அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அபாரமாக பந்துவீசி எதிரணி வீரர்களை மிரட்டியிருந்தார்.

    நடைபெற்று முடிந்த ஐபிஎல்-2023 தொடரின் 12 போட்டிகளில் பங்கேற்று 19 விக்கெட்டுக்களை கைப்பற்றி சென்னை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக திகழ்ந்தார்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் பத்திரணவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அணிக்கு துமித் கருணாரத்ன மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த குழாமில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடர் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

    Leave A Comment