நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி
முகாம் நடைபெற இருப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளை தமிழகமெங்கும் 2 கோடி பேர் வரை இலக்காக
கொண்டு, இந்த மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை 50 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்தவில்லை. 1 கோடியே 48 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியைச் செலுத்தவில்லை.
இவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வசதியாக
நாளை மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மெகா தடுப்பூசி முகாம்
நாளை நடைபெற உள்ளது.
Leave A Comment