• Login / Register
  • செய்திகள்

    நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

    தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

    நாளை தமிழகமெங்கும் 2 கோடி பேர் வரை இலக்காக கொண்டு, இந்த மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை 50 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்தவில்லை.  1 கோடியே 48 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியைச் செலுத்தவில்லை.

    இவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வசதியாக நாளை மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது.


    Leave A Comment