• Login / Register
  • செய்திகள்

    ஜார்க்கண்ட் வன்முறை: 2 பேர் பலி : 144 தடை உத்தரவு அமல்

    பாரதிய ஜனதா தலைவர்கள் இருவர் நபிகள் நாயகத்தை இழிவாகப் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜார்க்கண்ட்டில் போராட்டம் நடைபெற்றது. 

    போராட்டத்தின்போது வன்முறை வெடித்து 2 பேர் பலியானார்கள். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வன்முறை மேலும் பரவாமல் தடக்க இணையதள சேவை ஏற்கெனவே துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இணையதள தடை நாளை ஜூன் 12ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment