‘விரைவில் அரசியல் பயணம் – சசிகலா பரபரப்பு பேட்டி
திருக்கடையூர் அபிராமி, சிக்கல்
சிங்கார வேலர் திருக்கோயில்களில் வழிபாடு செய்வதற்காக வி.கே. சசிகலா சென்னையில் இருந்து
விமானம் மூலம் திருச்சி செல்ல வந்தார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுடன்
பேசிய அவர், ‘ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். அது முடிந்ததும் விரைவில் அரசியல்
பயணத்தைத் தொடங்கப் போகிறேன். அதிமுக பொதுச்செயலாளர் வழக்குத் தொடர்பாக நிச்சயம் விரைவில்
மேல்முறையீடு செய்வேன்’ என்று கூறினார்.
அதன்பின் விமானம் மூலம் திருச்சி
சென்ற சசிகலா அங்கும் செய்தியாளர்களிடம் பேசினார்.
‘அரசியல் பயணம் தனியாகவா? கூட்டணிக் கட்சியுடனா?’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது,
‘இங்குதானே இருக்கிறீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்’ என்று சசிகலா கூறினார்.
‘உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை டிடிவி தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா?’
என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுத்த சசிகலா, ‘கோயிலுக்குச் செல்கிறேன். இது பற்றி பிறகு
பதில் சொல்கிறேன்’ என கூறிவிட்டுச் சென்றார்.
Leave A Comment