• Login / Register
  • செய்திகள்

    ரணிலுக்கு மேலும் 116 பேர் ஆதரவு!

    மொட்டு சின்னத்தில் தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என ராஜபக்சக்கள் முடிவெடுத்துள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் 116 பேர் கொண்ட குழு இன்று (ஜூலை-31) கூடி தீர்மானித்துள்ளது.

    ஜனாதிபதியின் வெற்றிக்கு ஆதரவளிப்பதாக அந்தக் குழுவினர் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

    116 பேர் கொண்ட இந்தக் குழு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக பொதுஜன பெரமுன தரப்பில் இருந்து 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (30) சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்ததாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment