பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிப்போரின்போது
முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்த தமிழினப் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நிகழ்ந்தது.
தொழிற்கட்சிக்கு ஆதரவான பிரிட்டன் வாழ் தமிழர்களின்
ஏற்பாட்டின்கீழ் நடந்த இந்த உணர்வெழுச்சி மிக்க நினைவேந்தல் நிகழ்ச்சியில்,
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், இலங்கைத்
தமிழர்கள் பங்கேற்றனர்.
Leave A Comment