இங்கிலாந்தில் தாக்குதல்; 2 சிறுவர்கள் பலி - 9 பேர் காயம்!
இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் உள்ள நடனப் பள்ளியில் நபர் ஒருவர் ஆயுதமொன்றினால் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
சம்பவம் தொடர்பான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
Leave A Comment