• Login / Register
  • செய்திகள்

    மண்சரிவு அபாயம்; மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

    இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் மழை காரணமாக சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் உள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பதுளை மாவட்டத்தில் இரண்டு பிரதேசங்களுக்கு மஞ்சள் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை பகுதிகளுக்கு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, இன்று மாலை 4 மணிக்கு எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment