• Login / Register
  • செய்திகள்

    கடும் வெள்ளம், நிலச்சரிவு; 42 பேர் பலி - ஹைய்தியில் சோகம்

    ஹைத்தி நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதன்காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    குறித்த அனர்த்தங்களின் சிக்கி  இதுவரை 42 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள நகரங்களில் திடீரென பெய்த தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இதுகுறித்து ஐ.நா வெளியிட்ட தகவலில்,

    கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் மாயமாகியுள்ளனர். மொத்தம் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,400 பேர் வீடுகளை இழந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். 
     
    தலைநகர் போர்ட்-ஆவ்-பிரின்ஸ் பகுதியில் இருந்து தென்மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள லியோகனே நகரம் வெள்ளத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். 

    இதையடுத்து, தேசிய அவசரக்கால பேரிடர் இயக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஏரியல் ஹென்ரி உத்தரவிட்டுள்ளார். 

    Leave A Comment