• Login / Register
  • செய்திகள்

    கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படை கப்பல்!

    இலங்கை; கொழும்பு துறைமுகத்தை  பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது.

    PNS SHAHJAHAN   எனும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

    குறித்த கடற்படைக கப்பல் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    PNS SHAHJAHAN  என்பது 134.1 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது 169 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுவதோடு இதற்கு கேப்டன் Adnan Laghari TI தலைமை தாங்குகின்றார்.

    இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் குறித்த கப்பல் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளது. அத்துடன் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, குறித்த கப்பல் எதிர்வரும் 04 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment