• Login / Register
  • செய்திகள்

    2 மாதங்களில் 30 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து!

    கடந்த 2 மாதங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 30 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேசிய மருத்துவ ஆணையம் நிா்ணயித்த தரநிலை, விதிமுறைகளைப் பின்பற்ற தவறியதால் குறித்த மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்துள்ளது. 387-ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 654-ஆக அதிகரித்துள்ளது. இளங்கலை மருத்துவப் படிப்புக்கான இருக்கை எண்ணிக்கை 94 சதவீதமும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இருக்கை எண்ணிக்கை 107 சதவீதமும் உயா்ந்துள்ளது.

    இந்நிலையில், மருத்துவ கல்லூரிகளின் தரத்தை உறுதிப்படுத்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா, ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு, ஆசிரியா் பட்டியல் உள்படதேசிய மருத்துவ ஆணையம் நிா்ணயித்துள்ள தரநிலைகளை முறையாகப் பின்பற்றாத 30 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் கடந்த 2 மாதங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகம், குஜராத், அஸ்ஸாம், பஞ்சாப், ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், புதுச்சேரியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment