• Login / Register
  • செய்திகள்

    வீதி விபத்து; வடக்கில் 16 பேர் சாவு!

    இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளால் கடந்த 29 நாட்களில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வடக்கு மாகாணத்தில் மே மாதத்தின் 29 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி இவ்வாறு 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இவ்வாறு உயிரிழந்தவர்களில் யாழ் மாவட்டத்தில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு கடந்த 29 நாட்களில் மட்டும், யாழ்ப்பாணத்தில் 10 பேரும், கிளிநொச்சியில் 3 பேரும், மன்னார், முல்லைத்தீவு, வவுனியாவில் தலா ஒவ்வொருவருமாக வடக்கு மாகாணத்தில் உயிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment