• Login / Register
  • செய்திகள்

    தேங்காய் திருட்டு; இலங்கை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

    தேங்காய் திருடிய குற்றச்சாட்டிற்குள்ளான நபருக்கு இலங்கை நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    கம்பஹா - திவுலபிட்டிய தென்னந் தோட்டமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து 20 தேங்காய்களை திருடியதாக கெஹெல்-எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மீது குற்றச்சாட்டப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டது.

    குறித்த தேங்காய் திருட்டு வழக்கு விசாரணையின் போது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபருக்கு, மினுவாங்கொடை நீதவான் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்தார்.

    குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்ததுடன், அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாகவும் விதித்தார்.

    அத்துடன் அடுத்த 10 வருடங்களை நன்னடத்தையுடன் கழிக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதவான் அறிவுறுத்தினார்.

    Leave A Comment