கிழக்கு, மலையகம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
இலங்கையின் கிழக்கு மாகாணம், மலையகம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவதான அறிவிபு:-
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கொழும்பு - அடிக்கடி மழை பெய்யும்
காலி - அடிக்கடி மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை
கண்டி - அடிக்கடி மழை பெய்யும்
நுவரெலியா - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
இரத்தினபுரி - அடிக்கடி மழை பெய்யும்
திருகோணமலை - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்
மன்னார் - பிரதானமாக சீரான வானிலை
Leave A Comment