• Login / Register
  • செய்திகள்

    அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம்

    கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment