• Login / Register
  • செய்திகள்

    நெடுந்தீவு கடலில் தத்தளித்த 70 பயணிகள்; படகு போக்குவரத்தும் பாதிப்பு!

    நெடுந்தீவு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த சமுத்திரதேவா படகில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அதில் பயணித்த சுமார் 70 பயணிகள் நிலை ஆபத்தானதாக மாறிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

    நெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் இடையே வழமைபோன்று சமுத்திரதேவா படகு பயணித்துக் கொண்டிருந்த போது அநர்த்தம் ஏற்பட்டுள்ளது.

    குறித்த படகின் சுக்கான் உடைந்த நிலையில் அதில் பயணித்த பயணிகள் கடலில் அந்தரித்த நிலை ஏற்பட்டிருந்தது.

    இன்று(23) காலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிப் பயணித்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்தமையால் நெடுந்தீவுக்கான போக்குவரத்துத் தடைப்பட்டது.

    சுமார் 70 பயணிகளுடன் பயணித்த சமுத்திரதேவா, மலையடிப் பகுதியை அண்மித்தபோது அதன் சுக்கான் உடைந்துள்ளது. அந்தப் பகுதியில் நின்ற படகின் உதவியுடன், படகு நடத்துனர்கள் சாதுரியமாகச் செயற்பட்டு பயணிகளைப் பாதுகாப்பாக குறிகாட்டுவான் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

    இதன்காரணமாக பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதையிட்டு பல தரப்பிலும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    Leave A Comment