ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 9 வயது சிறுவன்; மீட்பு பணிகள் தீவிரம்
ராஜஸ்தான், ஜெய்ப்பூரில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 9 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவருகிறது.
ஜெய்ப்பூரில், போஜ்புரா கிராமத்தில், தோண்டப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் 9 வயது சிறுவன் எதிர்பாராத வகையில் விழுந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
Leave A Comment