• Login / Register
  • செய்திகள்

    பள்ளி வளாகத்திலேயே 4 வயது சிறுமிக்கு கொடுமை; ப்யூன் கைது!

    பள்ளி வளாகத்திலேயே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் அதே பள்ளியில் கடமையாற்றிய ப்யூன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

    சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

    டெல்லி ரோஹினி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 4 வயது மகளை கடந்த மே மாதம் அருகே உள்ள பள்ளியில் சேர்த்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மே 9ஆம் தேதி அன்று சிறுமி பள்ளி மைதானத்தில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ப்யூனாக வேலை பார்க்கும் 43 வயது நபரான சுனில் குமார் சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளார்.

    பின்னர், சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டி தொல்லை கொடுத்துள்ளார். பயந்து போய் சிறுமி அழத் தொடங்கிய நிலையில், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

    மாலை வீடு திரும்பியதும் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார்.

    தனக்கு தொல்லை கொடுத்த நபருக்கு பெரிய மீசை இருந்தது என அடையாளம் கூறியுள்ளார்.

    அதன்பேரில் சிறுமியின் தாயார் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவே, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

    பள்ளிக்கு வந்து விசாரித்ததில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அங்கு பியூனாக கடமையாற்றுபவர் எனத் தெரியவந்தது.

    சுல்தான்பூரி பகுதியில் வசித்து வரும் சுனில் குமார் அந்த பள்ளியில் 13 ஆண்டுகளாக ப்யூனாக பணிபுரிந்து வருவது உறுதி செய்யப்பட்டது. 

    சுனில் குமாரை கைது செய்த காவல்துறை அவரை சிறையில் அடைத்தது. இவர் இதற்கு முன்னர் வேறு சிறுமிகளுக்கு இதுபோல தொல்லை கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது.

    Leave A Comment