• Login / Register
  • செய்திகள்

    மலையகம், கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

    இலங்கையின் பெரும்பாலான இடங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்றைய தினம் மலையகம், கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சப்ரகமுவ, மேல், மத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

    சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

    நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

    பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

    அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை

    மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை

    கொழும்பு - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

    காலி - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

    யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை

    கண்டி - பிரதானமாக சீரான வானிலை

    நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

    இரத்தினபுரி - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

    திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை

    மன்னார் - பிரதானமாக சீரான வானிலை

    (வளிமண்டலவியல் திணைக்களம்)

    Leave A Comment