சீமான் மீதான PCR வழக்கை திரும்ப பெறக்கோரி DGP யிடம் புகார் மனு கையளிப்பு!
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு போடப்பட்டிருக்கும் PCR வழக்கை திரும்ப பெறக்கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்தேசிய தலைவர்கள் மற்றும் பறையர் சமூக தலைவர்கள் இணந்து சென்னை காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து குறித்த புகார் மனுவை வழங்கியுள்ளனர்.
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று (18) சென்ற தமிழ்தேசிய தலைவர்கள் மற்றும் பறையர் சமூக தலைவர்கள் ஒன்றிணைந்து சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனுவை அளித்துன்னர்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீதான ஜோடிக்கப்பட்ட PCR வழக்கை திரும்ப பெறக்கோரி, குறித்த புகார் மணு அளிக்கப்பட்டுள்ளதாக புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்ப்போர்ட் த.மூர்த்தி தெரிவித்தார்.
புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்ப்போர்ட் த.மூர்த்தி, ஆதிதமிழர் விடுதலை இயக்க தலைவர் ஆ.வினோத், தமிழ்தேசியவாதி மு.களஞ்சியம், வனவேங்கைகள் கட்சி தலைவர் பெ.ம.இரணியன், ஏப்ரல் 14 இயக்க தலைவர் சசிகுமார் உள்ளிட்ட 30 இற்கு மேற்படவர்கள் இணைந்து இப்புகார் மனுவை கையளித்தனர்.
Leave A Comment