• Login / Register
  • செய்திகள்

    திருகோணமலை உள்ளிட்ட இரு இடங்களில் நிலநடுக்கம்! (2ம் இணைப்பு)

    2ம் இணைப்பு

    இலங்கையில் நேற்று (18) மாலை முதல் இன்று (19) அதிகாலை வரையான காலப்பகுதியில் இருவேறு இடங்களில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

    அம்பாந்தோட்டை மற்றும் கிரிந்த மத்தியில் உள்ள புந்தல பிரதேசத்தில் நேற்று (18) மாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

    குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

    இதேவேளை, இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் கோமரன்கடவல பிரதேசத்தில் நில நடுக்கம் ஏற்'பட்டுள்ளது.

    குறித்த நிலநடுக்கம் 3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

    முன்னைய செய்தி....

    இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் இன்று (19) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    திருகோணமலை மாவட்டம் கோமரன்கடவல பிரதேசத்தில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    குறித்த நிலநடுக்கம் 3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

    இதேவேளை, இலங்கையின் புத்தல மற்றும் வெல்லவாய பிரதேசங்களுக்கு அண்மித்த பகுதிகளில் கடந்த மாதத்தில் மூன்று தடவை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று திருகோணமலையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment