• Login / Register
  • செய்திகள்

    பிரபாகரன் உயிருடன் உள்ளாரா? சீமான் பரப்பு பேட்டி!

    தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உயிருடன் உள்ளார் என பழ. நெடுமாறன் அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலளித்துள்ளார்.

    “நம்முடைய தமிழக தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சூழலும் ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பிய இலங்கை மக்களின் போராட்டமான இந்த சூழலில் தமிழ் தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த சூழலில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இந்தச் செய்தி மூலம் உறுதியான முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்.

    தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன்." என பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளிக்கையில்,

    “சின்னவன் பாலசந்திரனை பலி கொடுத்துவிட்டு பிரபாகரன் உயிரோடு தப்பியிருப்பார் என சொல்வது சரியல்ல. எந்த சூழலில் நாட்டைவிட்டு செல்ல மாட்டேன் என சொன்ன அவர், தப்பி சென்றிருப்பாரா? போர் முடிந்து பதினைந்து ஆண்டுகள் பதுங்கியிருப்பார் என நினைக்கிறீர்களா? சொல்லிவிட்டு வருபவர் அல்ல பிரபாகரன். அவர் வந்துவிட்டுதான் சொல்வார்” என கூறினார்.

    Leave A Comment