கொழும்பில் ஓட்டோவில் இருந்து சடலம் மீட்பு; கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (23) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்தவர் 33 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கருவாத்தோட்டம் பொலிஸாருக்கு மற்றும் 119க்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் குறித்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த முச்சக்கரவண்டி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடத்திய விசாரணையில் அது மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.
குறித்த நபரிடம் வினவியபோது, முச்சக்கரவண்டியை 33 வயதுடைய தனது மைத்துனருக்கு வாடகைக்கு செலுத்த வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave A Comment