30 %-த்தால் குறைவடையும் மின்கட்டணம்!
மின் கட்டணத்தில் சீரமைப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 30 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர இத்தகவலினை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதி அமுலாகும் வகையில் மின்கட்டணம் 30 சதவீதத்தால் குறைவடையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை – தெனியாய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலேயே இந்த மின் கட்டண குறைப்பு அமுலாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Leave A Comment