• Login / Register
  • செய்திகள்

    ஜூலியன் அசாஞ்சே விடுதலை; அதியுயர் பாதுகாப்பு சிறையில் இருந்து விடுவிப்பு!

    அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் இங்கிலாந்தில் உள்ள அதியுயர் பாதுகாப்பு சிறையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

    விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்க இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை காரணமாக, விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன்  அசாஞ்சே மீது அமெரிக்க நீதித்துறை 18 குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

    அதன்படி, அவர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு இலண்டனில் உள்ள அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பெல்மார்ஷ் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.

    இந்நிலையில், ஐந்து ஆண்டுகளின் பின்னர் தற்போது ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment