டிரம்பிற்கு சிறைத்தண்டனை? நியூயோர்க் நீதிமன்றம் அதிரடி!
அமெரிக்காவின் முன்னாள் ஜநாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான வழக்கில் அவர் குற்றவாளி என நியூயோர்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வணிக ஆவணங்களில் பொய்யான விபரங்களை சேர்த்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நியுயோர்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைக்க டிரம்ப் பணம் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் டிரம்ப் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த நிலையில் தற்போது குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு எதிராக குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
இதையடுத்து வரும் ஜூலை 11ம் திகதி டிரம்பிற்கு எதிரான தீர்ப்பு அறிவிக்கப்படும்.
இதன்போது டிரம்பிற்கு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் எனவும் அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை டிரம்ப் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave A Comment