• Login / Register
  • செய்திகள்

    புதினின் ராணுவ ஆலோசகருக்கு வைக்கப்பட்ட குறி; கார் குண்டு வெடிப்பில் அவரது மகள் பலி

    ரஷிய அதிபர் புதினுக்கு நெருக்கமானவரும், ரஷிய சித்தாந்தவாதியான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா மாஸ்கோவின் புறநகர் பகுதியில் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரஷிய விசாரணைக் குழு கூறுவதாவது:  அலெக்சாண்டர் டுகின் பயணம் செய்ய வேண்டிய காரில் கடைசி நேரத்தில் அவரது மகள் டாரியா டுகினா பயணம் செய்துள்ளார்.

    இந்நிலையில், மாஸ்கோவின் புறநகர் பகுதியான 40 கி.மீ தொலைவில் உள்ள போல்ஷி வைசியோமி கிராமத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது தனது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் டாரியா டுகினா பலியானதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

    டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் பலியானது குறித்து விசாரணை நடத்த புதின் உத்தரவிட்டுள்ளார். 

    இந்நிலையில், டுகினாவின் கார் குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. 

    புதின் மூளையாகவும், உக்ரைன் மீதான ரஷிய நடவடிக்கைகளுக்கு பின்னால் அலெக்சாண்டர் டுகின் இருப்பதாக  கூறப்படுவதால் அவருக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளது. 

    Leave A Comment