• Login / Register
  • செய்திகள்

    தனுஷ்கோடி மணல் திட்டில் தவித்த 5 சிறுவர்கள் உட்பட 8 இலங்கை தமிழர்கள் மீட்பு!

    அகதிகளாக தஞ்சம் கோரி படகுமூலம் தமிழகம் வந்த 5 சிறுவர்கள் உட்பட 8 இலங்கை தமிழர்கள் தமிழக கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

    நேற்றிரவு படகுமூலம் புறப்பட்ட குறித்த இலங்கையர்கள், தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் மணல் திட்டை இன்று காலை வந்தடைந்துள்ளனர்.



    அவர்கள் உணவின்றி தவிப்பதாக தமிழக மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்கு சென்ற தமிழக கடலோர காவல் படையினர், அவர்களை பாதுகாப்பாக மீட்டு மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



    யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாரை சேர்ந்த மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்றுவரையான காலப்பகுதியில், இலங்கையில் இருந்து 157 பேர், புகலிடம்கோரி தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment