• Login / Register
  • மேலும்

    விழுந்து நொறுங்கிய 'லூனா-25'; ரஷியாவின் முயற்சி தோல்வி!

    ரஷியாவின் 'லூனா-25' விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    நிலவுக்கான இந்தியாவின் பயணமாக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் நாள்-நேரம் குறித்தும் நிலவில் தரையிறங்கும் நாள்-நேரம் குறித்தும் முன்கூட்டியே அறிவித்து ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்த நிலையில், மிகவும் ரகசியமான முறையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்த ரஷியா கடந்த 10 ஆம் தேதி 'லூனா-25' விண்கலத்தை நிலவை நோக்கி அனுப்பியிருந்தது.

    ஒரே நேரத்தில் நிலவை நோக்கி சந்திரயான்-3 மற்றும் லூனா-25 விண்கலங்கள் பயணத்தை ஆரம்பித்தமை 'விண்வெளி பந்தயைமாக' பார்க்கப்படும் நிலையை ஏற்படுத்தியிருந்தது.

    குறித்த விண்வெளி பந்தயத்தில் சந்திரயான்-3 ஐ முந்திக்கொண்டு ரஷியாவின் லூனா-25 நாளை (21) தரையிறங்குவதற்கு திட்டமிட்டிருந்தது.

    சோயுஸ் ராக்கெட் மூலம் கடந்த 10ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட லூனா-25 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி அங்கிருக்கும் நீா்வளம் பற்றியும், பிற கனிம வளங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. 

    இந்த நிலையில் நாளை தரையிறங்கவிருந்த லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    லூனா 25 விண்கலம் தொடர்பை இழந்த நிலையில் 19, 20ல் இணைப்பை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தொடர்பை இழந்த நிலையில் நிலைவில் விழுந்து நொறுங்கியுள்ளது.

    இதன்மூலம் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷியா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதனிடையே சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் ஆக.23ல் மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்குகிறது.

    ரஷிய விண்கலம் தோல்வியால் நிலவின் தென் துருவத்தில் விண்கலம் தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    Leave A Comment