• Login / Register
  • ஆன்மிகம்

    அவினாசி லிங்கேசுவரர் கோவில் : தரிசன கட்டணங்கள் உயர்வு

    சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரபாடல் பெற்ற கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் தரிசன கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன.

    அர்ச்சனை  டிக்கெட் ரூ.2 என இருந்ததை தற்போது ரூ.5 எனவும், சிறப்பு வழி தரிசனத்திற்கு ரூ.10 ஆக இருந்த கட்டணத்தை ரூ.50 ஆகவும், அபிஷேகத்திற்கு ரூ.100-யில் இருந்து ரூ.250 ஆகவும், நவகிரக சாந்திக்கு ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது. 

    மேலும் திருமண நிச்சயதார்த்த கட்டணம் ரூ.100 என இருந்ததை ரூ.500 ஆகவும், பரிகார பூஜைக்கு ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆகவும், திருமணத்துக்கு ரூ.1000 ஆகவும் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். 

    இது குறித்து கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியிடம் கேட்டபோது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அலுவலக தகவல் பலகையில் கட்டணம் உயர்வு குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என்றார்.


    Leave A Comment