• Login / Register
  • முகப்பு

    விளம்பரப் பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலி; கோவையில் சோகம்

    விளம்பரப் பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை கருமத்தம்பட்டியில் விளம்பரப் பலகை  சரிந்து விழுந்து 3 பேர் பலியான நிலையில், கருமத்தம்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பலந்த காற்று வீசியதால் விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததா அல்லது பணியின்போது சரிந்து விழுந்ததா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில்  குணசேகரன் வயது (52), குமார் (50), குமார் (35) ஆகிய மூவரே உயிரிழந்துள்ளனர்.

    இவர்கள் மூவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் விளம்பரப் பலகை அமைக்கும் தொழிலாளிகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    Leave A Comment