• Login / Register
  • முகப்பு

    100 இடங்களில் NIA அதிரடி சோதனை - 6 மாநிலங்களில் முன்னெடுப்பு!

    ஆறு மாநிலங்களில் உள்ள 100 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (17) புதன்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போதைப் பொருள்கள் கடத்தல் கும்பல், தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய 5 வழக்குகளை அடிப்பயைடாக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களிலும் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    குறித்த மாநிலங்களின் காவல்துறையினர் உதவியுடன் 100 இடங்களில் இடம்பெற்று வரும் சோதனை நடவடிக்கையில் 200 என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment