ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா தொற்று!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் நேற்று (16) ஒரே நாளில் 514 தொற்றாளர்கள் பதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய கொரோனா தொற்று நிலவரம் தொடர்பில் சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிவிப்பு:
‘தமிழ்நாட்டில் ஞாயிற்றுக் கிழமை (16) ஒரே நாளில் 5,866 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய இருவர் உள்ளிட்ட ஆண்கள் 255 பேர், பெண்கள் 259 பேருமாக 514 பேருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்மூலம் மொத்தகொரோனா பாதிப்பு 36,02,215 ஆக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமை மட்டும் 366 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.
தற்போது, 3,195 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் 138 பேருக்கும், கோயம்புத்தூரில் 55 பேருக்கும், செங்கல்பட்டில் 26 பேருக்கும் கன்னியாகுமரியில் 50 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Leave A Comment