#Update துருக்கி, சிரியாவில் பலி எண்ணிக்கை 24,000 ஆக அதிகரிப்பு!
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களது எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
பெரும் எண்ணிக்கையானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இறுதியாக கிடைத்துள்ள மருத்துவத்துறை தகவல்களின் அடிப்படையில் துருக்கி, சிரியாவில் இதுவரை 23,700 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் 20,213 பேரும் சிரியாவில் 3,553 பேருமாக 23,766 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளால் இடிந்து தரைமட்டமாகிப்போயுள்ள ஆயிரக்கணக்கான கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Leave A Comment