• Login / Register
  • முகப்பு

    நீட் விலக்கு; தமிழ் நாடு மருத்துவத்துறைக்கு மீண்டும் மத்திய அரசு கடிதம்!

    தமிழ் நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட  நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு தமிழ் நாடு மருத்துவத்துறைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.

    தமிழ் நாடு சட்டப்பேரவையில் கடந்தாண்டு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு அனுப்பினார்.

    ஏற்கனவே நீட் விலக்கு மசோதா குறித்து கடந்த ஆண்டே மத்திய சுகாதார அமைச்சகம் தமிழ் நாடு அரசிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில் தமிழ் நாடு மருத்துவத்துறையும் மத்திய அமைச்சகத்திற்கு அதற்க்கு பதில் அளித்திருந்தது.

    இந்நிலையில்இ ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் தமிழ் நாடு மருத்துவத்துறைக்கு நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய அரசு மீண்டும் விளக்கம் கேட்டுள்ளது.

    இதற்க்கு  ஓரிரு வாரங்களில் தமிழ் நாடு அரசுத் தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    Leave A Comment