• Login / Register
  • ராசி பலன்கள்

    12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன்!

    20/02/2023 முதல் 26/02/2023 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்குமான ராசிபலன்.

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும். எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு உங்களுக்கு வெற்றி. முயற்சி செய்யாமல் சும்மாவே இருந்தால் எதுவும் கிடைக்காது. அது நாம் எல்லோருக்கும் தெரியும். இருப்பினும் கூடுதல் முயற்சியை இந்த வாரம் போட வேண்டும். எல்லா விஷயத்திலும் அதிக கவனம் இருக்க வேண்டும். போட்டி பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் நாமும் கொஞ்சம் உஷாராக நடந்து கொள்ள வேண்டும். ஏமாளியாக இருக்காதீங்க. இந்த வாரம் நெருங்கிய நண்பரை கூட நம்ப வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. வார இறுதியில் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். தினம் தோறும் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போடுவது நல்லது.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கும். பண வரவு சீராக இருக்கும். செலவுகளை சமாளித்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பெரியதாக பிரச்சனை இருக்காது. மேலதிகாரிகள் சொல்லுவதை கேட்டு நடக்க வேண்டும். அவ்வளவு தான். ஆனால் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். புதுசாக ஏதாவது தொடங்கினால் அது இழுபறியாக இருக்கும். உடனடியாக வேலையை முடிக்க முடியாத சில சங்கடங்கள் உண்டாகும். மற்றபடி பிரச்சினைகள் எதுவும் கிடையாது. இரவு நல்ல தூக்கம் இருக்கும். மன நிறைவான வாரம்தான். செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்கு அரளிப்பூ வாங்கி கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானத்தில் பிரச்சனை இருக்கும். அதாவது செலவுகள் அதிகரிக்க போகின்றது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சில பேருக்கு சுப செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்காது‌. கொடுத்த இடத்திலிருந்து கடனை வசூல் செய்ய முடியாமல் சிக்க வேண்டிய சூழ்நிலை. இப்படி நிதி நிலைமை தடுமாற்றத்தோடு இருக்கும். ஆனாலும் குறுக்கு வழியில் போகாதீங்க. மற்றபடி பிரச்சினைகள் பெரியதாக எதுவும் இருக்காது. தினம்தோறும் விநாயகர் கோவிலுக்கு சென்று மூன்று முறை வளம் வந்து தடைகள் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் நல்லது நடக்கும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கப் போகின்றது. சோர்வாக இருந்த நாட்களை எல்லாம் கடந்து வந்து விட்டீர்கள். இனிமேல் சுறுசுறுப்போடு சந்தோஷமாக வேலைகளை பார்க்கப் போகிறீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நல்லது. யாரிடம் பேசும் போதும் வார்த்தையில் கவனம் இருக்க வேண்டும். சொத்து சுகம் வாங்குவதற்கான யோகம் இருக்கின்றது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பை கொடுக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். தினம் தோறும் சிவன் கோவிலுக்கு சென்று ஐந்து நிமிடம் அமைதியாக உட்கார்ந்தாலே உங்களுக்கு நல்லது நடக்கும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சங்கடங்கள் வரும். கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருக்கும். வீட்டில் பிள்ளைகள் உங்கள் சொல் பேச்சைக் கேட்டு நடக்க மாட்டார்கள். முன்கோபம் அதிகமாக வரும். சண்டை சச்சரவுகளால் மன நிம்மதி லேசாக கெட்டுப் போகும். இரவு தூக்கம் வராது. வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக கவலைப்பட வேண்டாம் இந்த வார இறுதிக்குள் எல்லாம் சரியாகிவிடும். காசு விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். சொந்த தொழிலில் புதுசாக எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இருக்கும் வேலையை பார்த்தால் மட்டும் போதும். வீட்டில் கெட்டி மெல்ல சத்தம் கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு நிற பூக்களை வாங்கி கொடுத்தால் நல்லது நடக்கும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய நன்மைகள் நடக்கும். அப்படி என்றால், உங்களுடைய கெட்ட பழக்கங்களை நீங்கள் விடுவதற்கான சந்தர்ப்பத்தை அந்த கடவுள் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றார். தீயவழியில் சென்றவர்கள் கூட, நல்ல வழியில் செல்வதற்கு நேரம் காலம் வந்துவிட்டது. வேலை செய்யும் இடத்தில் சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கும். சோம்பேறித்தனத்தோடு இருக்க வேண்டாம். தினசரி வேலையை அன்றே செய்து முடித்து விடுங்கள். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். வேலை செய்றவர்கள், பாட்னர் இவர்களெல்லாம் பிரச்சனை கொடுப்பார்கள். கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் பிரச்சனை இல்லை. அதிரடியாக எந்த முடிவையும் எடுக்காதீங்க. யாருக்கும் கடன் கொடுக்காதீங்க கடன் வாங்காதீங்க. தினம் தோறும் வீட்டில் விளக்கு ஏற்றி குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. புதியதாக சொத்து சுகம் வாங்குவீர்கள். உங்களுடைய கனவு நினைவாவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அது வெற்றியும் கொடுக்கும். வரவுக்கேற்ற செலவு காத்துக் கொண்டே இருக்கும். தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். என்னதான் இருந்தாலும் ஏதோ ஒரு குழப்பம் மனதில் சஞ்சலத்தை உண்டாக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். வேறு சிந்தனைகளை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். பிரச்சனை என்று வந்தால் உதவ நான்கு பேர் நிச்சயம் வருவார்கள். கவலைப்படாதீங்க, தினம் தோறும் பக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில் இருந்தால் அங்கு சென்று ஐந்து நிமிடம் அமர்ந்து வாருங்கள். ஸ்ரீ ராம ஜெயம் சொன்னால் எல்லாம் சரியாகிவிடும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். கல்யாண விசேஷங்களுக்கு சென்றால் கூட அளவோடு சாப்பிட வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. செலவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள். மற்றபடி வேலை செய்யும் இடத்தில் நினைத்தபடி உங்களுக்கு ஆதரவாக நிறைய பேர் பேசுவார்கள். நல்லதே நடக்கும். ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கு இரண்டு விளக்கு போட்டால் நன்மை உண்டு.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லேசான சிக்கல் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. எதை செய்தாலும் அதில் ஒரு சின்ன தடை வரும். அதன் பிறகு அது சரியாகிவிடும். ஆனால் அந்த தடையை தாண்டி போக வேண்டியது உங்கள் கையில் தான் உள்ளது. பிரச்சனை என்று வந்ததும் மனம் சோர்வு அடையக் கூடாது. குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக தான் பேசுவார்கள். இருப்பினும் முன்னேற விடாமல் சில பேர் பின்னால் குழி தோண்டிக் கொண்டு இருப்பார்கள். அதையும் நீங்கள் தான் சமாளிக்க வேண்டும். வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கிறது. யாரிடமும் அதிகமாக பேசி வம்பை வளர்க்காதீர்கள். முன்கோப படாதீங்க. முன்பின் தெரியாதவர்களுடன் இந்த நட்புறவும் வைத்துக் கொள்ள வேண்டாம். யார் வேண்டுமென்றாலும் உங்களை ஏமாற்றலாம். வீட்டு பக்கத்தில் அங்காளம்மன், நரசிம்மர், வாராகி, இப்படி யாராவது இருந்தால் அவர்களை வழிபாடு செய்யுங்கள். நன்மை உண்டு.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் சுகமான வாரமாக இருக்கப் போகின்றது. எல்லாம் உங்களுக்கு நன்மைதான் நடக்கும். நீங்கள் இதை செய்யலாம் என்று நினைத்தால், அந்த காரியம் உடனடியாக நல்லபடியாக முடியும். இந்த இடத்திற்கு போகலாம் என்றால் உடனடியாக சவுகரியமாக அந்த இடத்திற்கு போய் சேர்ந்து விடுவீர்கள். ஏரோபிளேனிலேயே போனால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சிரமங்கள் எதுவும் இல்லாமல் சுக போகமாக வாழப்போகும் வாரம் இது. ஆனால் எல்லா விஷயத்திலும் கவனம் இருக்க வேண்டும். அனாவசியமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. முடிந்தால் குடும்பத்தோடு ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் நன்மை.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். குடும்பத்தில் புதிய வரவு இருக்கும். சந்தோஷத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்திலும் தொழிலிலும் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். மனம் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். வாங்கிய கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுக்க பாருங்கள். மீண்டும் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. சேமிப்பை உயர்த்துங்கள். செலவை குறையுங்கள். அப்போதுதான் பண பிரச்சனை தீரும். தேவையில்லாத ஏதாவது குறுக்கு வழி, கெட்ட பழக்கம், கெட்ட சேர்கை இருந்தால் அதை விட்டு விடுங்கள். பின்னால் பெரிய பிரச்சனை வந்துவிடும். பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி இலையால் சனிக்கிழமை அர்ச்சனை செய்வது நல்லது.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் மனக்கவலை இருக்கும். வருமானம் சரியாக இருக்காது. கையில் இருக்கும் பணம் செலவாகிக் கொண்டே இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எல்லோருக்கும் இது நடப்பது தான். இருந்தாலும் பண பிரச்சினை என்று வரும்போது மனம் கஷ்டம் அடையத்தான் செய்யும். இருந்தாலும் உங்களுக்கு இந்த வாரம் நல்ல பெயர் கிடைக்கும். பிறருக்கு உதவி செய்து பாராட்டை பெற போகிறீர்கள். அந்த ஒரு மனநிறைவு போதும். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அந்த உங்களுடைய நல்ல எண்ணம், வாழ்க்கையில் உங்களை வீழ்த்தாது. கஷ்டம் இருந்தாலும் உங்களுக்கு நல்லதே நடக்கும். தினமும் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று விளக்கு போடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

    Leave A Comment