• Login / Register
  • விளையாட்டு

    IPL-2023: மிரட்டிய அர்ஷ்தீப் சிங்; நிலைகுலைந்த KKR - பஞ்சாப் வெற்றி!

    ஐபிஎல்-2023 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஓட்டங்களினால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர் அணிகள் இன்றைய முதலாவது போட்டியில் மோதிக்கொண்டன.

    நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

    இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை பெற்றுள்ளது.

    பஞ்சாப் அணி சார்பில் இலங்கை வீரரான பானுக ராஜபக்ச -50, ஷிகர் தவான் -40 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். சாம் கரன் 2 சிக்சர்களுடன் 26 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதிரு|ந்தார்.

    பந்துவீச்சில் ரிம் சௌதே 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதையடுத்து 192 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பொடுத்தாடிய கொல்கத்தா அணிக்கு பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் பெரும் நெருக்கடியினை ஏற்படுத்தியிருந்தார்.

    அவ்வப்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பஞ்சாப் அணி வீரர்களின் பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது கொல்கத்தா அணி.

    கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

    மழை தொடர்ந்ததையடுத்து டக்வெத்-லூயிஸ் முறையில் 7 ஓட்டங்களால் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

    கொல்கத்தா அணியின் மண்தீப் சிங் (02), அனுகுல் ராய் (04) மற்றும் விக்னேஷ் ஐயர் (34) ஆகியோரை வெளியேற்றினார் அர்ஷ்தீப் சிங்.

    3 ஓவர்கள் பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 19 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து முக்கிய 3 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்திருந்தார் அர்ஷ்தீப் சிங்.

    கொல்கத்தா அணி சார்பில் அன்ட்ரூ ரஷல் - 35, விக்னேஷ் ஐயர் - 34, ரஹ்மதுல்லா - 22 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.

    ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் தெரிவு செய்'யப்பட்டார்.

    Leave A Comment