• Login / Register
  • விளையாட்டு

    மிட்சல் ஸ்டார்க் மிரட்டல்; 117 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!

    இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சில் நிலைகுலைந்த இந்திய அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இரு அணிக்கும் இடையிலான 2-வது ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது.

    விசாகப்பட்டினத்தில் சில நாட்களாக மழைபெய்து வருவதால் ஈரப்பதம் கொண்ட மைதானத்தில் டாஸ் வெல்வது முக்கியமானதாக இருந்தது.

    .ந்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, களமிறங்கிய இந்திய அணி முதல் ஆட்டத்தை போன்றே இன்றும் பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டது.

    ஷுப்மன் கில், ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறி ஏமாற்றினார்.

    கடந்த ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தபோதும், 13 ரன்களுக்கு அவரும் ஸ்டார்க்கின் வேகபந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

    இதற்கடுத்த பந்தில் சூர்யகுமார் யாதவ் ஓட்டமெதனையும் பெறாது எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகி வந்தவேகத்தில ;நடையைகட்டினார்.

    கடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பானதொரு இன்னிங்ஸை விளையாடி கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று அணிக்கு வெற்றி தேடித்தந்த கே.எல்.ராகுல் இம்முறை 9 ரன்களோடு பெவிலியன் திரும்ப இந்திய அணி ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர்.

    ஆஸ்திரேலிய பந்துவீசந்சுக்கு முகம் கொடுக்கமுடியாது மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும், விராட் கோலி களத்தில் இருந்தது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்தது. அதற்கேற்ப விராட்டும் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விரட்டி ரன்கள் சேகரித்து வந்தார்.

    ஆனால், ஆஸ்திரேலியாவின் இளம் பவுலர் எல்லிஸ் அதற்கும் வேட்டுவைத்தார். அவர் வீசிய இரண்டாவது பந்திலேயே விராட் கோலி எல்பிடபிள்யூ ஆகி வெளியேற, இதன்பின் வந்தவர்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்தனர்.

    அக்சர் படேல் மட்டுமே கடைசிவரை அவுட் ஆகாமல் 29 ரன்கள் சேர்த்தார்.

    26 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் நால்வர் ரன்கணக்கை தொடங்காமலேயே வெளியேறினர்.

    இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கி சரிவுக்கு வித்திட்ட மிட்சல் ஸ்டார்க், ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். அவருக்கு பக்கபலமாக ஸீன் அப்பாட் 3 விக்கெட்டுக்களையும், நாதன் எல்லிஸ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

    முதல் போட்டியில் தோற்றதற்கு பழிவாங்கும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி ஆக்ரோசமாக பந்துவீசி 117 ரன்களுக்குள் இந்திய அணியை சுருட்டியுள்ளது.

    இதையடுத்து 118 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.

    மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    Leave A Comment