WPL ஆர்சிபி அணியின் ஆலோசகராக சானியா மிர்சா!
WPL போட்டியில் ஆர்சிபி அணியின் ஆலோசகராக பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
WPL போட்டியில் வீராங்கனைகளுக்கான ஏலம் மும்பையில் திங்கள் அன்று நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். WPL போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆலோசகராகப் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி சானியா மிர்சா கூறம்போது
இந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டபோது நான் ஆச்சர்யமடைந்தேன். விளையாட்டை முதல் விருப்பமாகத் தேர்வு செய்யலாம், எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் விளையாட்டில் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கைகளை அடுத்தத் தலைமுறை வீராங்கனைகளிடம் ஏற்படுத்துவேன் என்றார்.
இந்த மாதத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா சமீபத்தில் அறிவித்தார். ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 35 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. 2021-ல் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார். பிப்ரவரி 19 முதல் நடைபெறவுள்ள துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவிட்டு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
Leave A Comment