• Login / Register
  • விளையாட்டு

    3வது போட்டி; இந்திய அணி துடுப்பாட்டம்!

    சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான 3வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

    திருவனந்தபுரத்தில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது. 

    இன்றைய போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உம்ரான் மாலிக், ஹார்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர். 

    இலங்கை அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜெஃப்ரி வண்டர்சே, அசேன் பந்த்ரா அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    முதலில் நடைபெற்ற இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

    சற்று முன்னர் வரை இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 75 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

    Leave A Comment