டி-20 தொடரை வென்று இந்தியா அபாரம்!
சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரின் 3வதும் இறுதியுமான போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் வென்றுள்ளது இந்திய அணி.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.
3வதும் இறுதியுமான போட்டி நேற்று நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 112 ரன்களை விளாசினார். இதில் 9 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.
சுப்மான் கில் - 46, ராகுல் திரிபாதி - 35, அக்ஷர் பட்டேல் - 21 ரன்களையும் பெற்றிருந்தனர்.
இதையடுத்து, 229 ரன்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங் செய்த இலங்கை அணி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இலங்கை அணியில், குசல் மென்டிஸ் 23 ரன்களும், தசுன் ஷானகா 23 ரன்களும், சில்வா 22 ரன்களும் அடித்தனர்.
பந்துவீச்சில், அர்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், சாஹல்இ ஹர்த்தி பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதன் மூலம் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 : 1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
Leave A Comment