தமிழகத்தில் Bஏ 4 வகை கொரோனா தொற்று- மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஒமைக்ரான் பிஏ 4 வகை கொரோனா தொற்று பாதிப்பு
கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'செங்கல்பட்டு மாவட்டம்
நாவலூரில் உள்ள ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்றான பிஏ 4 வகை
கண்டறியப்பட்டுள்ளது'.
புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது நலமுடன் உள்ளார்.
இந்த நிலையில், 'அவரின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடைபெற்றதில், பாதிக்கப்பட்ட நபரின் தாய் மற்றும் அவரின் மகளுக்கும், உருமாறிய புதிய வகை பிஏ 4 கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய உருமாறிய பிஏ 4 வகையில் பரவும் தன்மையில் இல்லை’ என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த வாரம் ஹைதராபாத்தில் ஒருவருக்கு உருமாறிய பிஏ 4 வகை கொரோனா
தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்திலும் ஒருவருக்கு இந்த பாதிப்பு
ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave A Comment