• Login / Register
  • செய்திகள்

    'இந்தியாவில் தற்கொலை தாக்குதல் நடத்துவோம்': அல்கொய்தா மிரட்டல்

    பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த மே மாதம் 27ஆம் தேதி, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

    இதனிடையே பா.ஜ.க.வை சேர்ந்த மற்றொரு நிர்வாகி நவீன் குமார் ஜிண்டாலும், நபிகள் நாயகத்திற்கு எதிராக  டிவிட்டரில் கருத்துகளை பதிவு செய்து இருந்தார்.

    இந்த நிலையில், இருவரும் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டனர்.

    பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து நபிகள் நாயகத்தை அவமதித்து பேசியது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் கருத்துகளுக்கு குவைத், ஈரான், ஜோர்டான், சௌதி அரேபியா உள்பட 15 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே, முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததற்காக இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா எச்சரித்துள்ளது.


    இது குறித்து அல்கொய்தா வெளியிட்டுள்ள கடிதத்தில், 'இந்துத்துவா தீவிரவாதிகள் இந்தியாவை ஆக்கிரமித்துள்ளனர். நபிகளின் கண்ணியத்தை காப்பதற்காக நாம் போராட வேண்டும். மற்றவர்களும் நம் நபியின் கண்ணியத்திற்காக போராடி உயிரிழக்க வேண்டும். அதேசமயம், நபியை அவமதிப்பவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டும்.

    நபிகள் கண்ணியத்தை காப்பாற்றுவதற்காக தில்லி, மும்பை, உத்தரபிரதேசம் மற்றும் குஜராத்தில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தப்போகிறோம்' என எச்சரித்துள்ளது.

     

    Leave A Comment