அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு
தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாக பொது மக்களை வாட்டி வதைக்க தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த மே 4ஆம் தேதிஅக்னி நட்சத்திரம் தொடங்கியது. கடந்த 25 நாள்களாக வாட்டி வதைத்து வந்த இந்த அக்னி வெயிலின் கோரத் தாண்டவம் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் பல இடங்களில் கடந்த மூன்று நாள்களாக வெயில் 100 டிகிரிக்கும் மேல் காணப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த மே 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் 104 டிகிரி வெப்பம் பதிவானது.
இதனிடையே,
அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைந்தாலும், வெயிலின் தாக்கம் அடுத்த மூன்று நாள்களுக்கு
அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Leave A Comment