• Login / Register
  • செய்திகள்

    ரோல்ஸில் காத்திருந்த அதிர்ச்சி - பிளாஸ்டிக் முட்டை தொடர்பில் விசாரணை!

    இலங்கையின் கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கிய ரோல்ஸில் காணப்பட்ட முட்டை தொடர்பில் வாடிக்கையாளர் ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு - அளுத்கம பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    குறித்த உணவகத்தில் வாங்கிய முட்டை ரோல்ஸில் வைக்கப்பட்டிருந்த முட்டை இயல்பு தன்மைக்கு மாறாக இறப்பர் போன்று காணப்பட்டுள்ளதை அடுத்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் அது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

    குறித்த முறைப்பாடானது அளுத்கம சுகாதார பரிசோதகரிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    முறைப்பாட்டாளர் மற்றொரு நபருடன் அளுத்கம பிரதேசத்தில் உள்ள குறித்த உணவகத்திற்குச் சென்று 1,230 ரூபாய்க்கு முட்டை ரோல்ஸ், பணிஸ், மீன் ரோல்ஸ் போன்ற சிற்றுண்டிகளை வாங்கியுள்ளார்.

    இதன் போதே கொள்முதல் செய்யப்பட்ட ரோல்ஸில் முட்டை போன்ற வெள்ளை நிற இறப்பர் போன்ற பொருள் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறித்த உணவகம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Leave A Comment