திடீர் திருப்பம்; சீமான் ரெம்ப பவர்புல் - விஜயலட்சுமி!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு வழக்கை தொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் திடீர் திருப்பதமாக வழக்கை வாபஸ் பெற்றதோடு 'சீமான ரெம் பவர்புல்' தமிழ் நாட்டில் சீமானுக்கு தான் செல்வாக்கு அதிகமாக உள்ளதாக நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
நடிகை விஜயலக்சுமி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர்ந்த நிலையில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு வளசரவாக்கம் காவல்நிலையத்திற்கு தனது வழக்கறிஞருடன் நேரில் வந்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான தனது புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறி காவல்துறையிடம் கடிதம் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி,
சீமான் மீது புகார் தெரிவித்த தன்னிடம் தான் காவல்துறையினர் அதி தீவிரமாக விசாரித்தனர் என்றும், சமூக வலைதளங்களிலும் தன்னைப் பற்றி நிறைய அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடும் சற்றே மந்தமாக இருந்தாக குறிப்பிட்ட விஜயலட்சுமி, தன்னால் முடிந்த அளவில் போராடி விட்டதாகவும், இனி சட்ட ரீதியாக போராட தன்னிடம் சக்தி இல்லை என்றும் கூறினார்.
சீமானிடம் பேசினேன் வழக்கை வாபஸ் பெற்று விட்டேன். வழக்கை தொடர்வது சென்னைக்கு வருவது இனி இல்லை. இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி இல்லை. போலீசாரின் நடவடிக்கை மெதுவாக இருந்தது. 20 சம்மன் அனுப்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது என சீமான் கூறிவிட்டார்.
சீமான் புல் பவராக உள்ளார். சீமான் எப்போதும் நன்றாக இருக்கும். எப்போதும் வெற்றியோடு இருக்கட்டும். சீமானை தற்போது ஒன்றும் செய்ய முடியாது. நான் சீமானிடம் காசு வாங்கவில்லை.
சீமானின் குரல் தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அது ஒலித்து கொண்டே இருக்கட்டும். சீமானை விசாரணைக்கு கொண்டு வருவது முடியவில்லை அதனால் அவர் பவராக உள்ளார். இந்த சட்டப் போராட்டத்தில் சீமானே வெற்றி பெற்றதாக கூறிய விஜயலட்சுமி, அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.
வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும், மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
Leave A Comment