ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!
ஜெய்ப்பூரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள போஜ்புரா கிராமத்தில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் 9 வயது சிறுவன் அக்ஷித் இன்று காலை 7 மணியளவில் எதிர்பாராத வகையில் விழந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவந்த நிலையில் சுமார் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அக்ஷித்தை இரும்பு வலையின் உதவியுடன் வெளியே எடுத்தனர்.
பின்னர் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனின் உடல்நிலை ஆபத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.
Leave A Comment