• Login / Register
  • செய்திகள்

    25 அடி உயர மணல் சிற்பங்கள்; புதுச்சேரி கலைஞர்கள் அசத்தல்!

    புதுச்சேரியில்   25 உயரத்தில் கைகளால் உருவாக்கப்பட்ட  கிராம தெய்வங்களுக்கான  சிலைகளை அமைத்து கலைஞர்கள் அசத்தியுள்ளனர். 

    புதுச்சேரியில் ஓராண்டாக சிமெண்ட், இரும்புகள் இன்றி 25 உயரத்தில் கைகளால் உருவாக்கப்பட்ட  கிராம தெய்வங்களுக்கான சிலைகள்  பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் பெரியசாமி கோவிலில் பிரதிஷ்டை செய்து புனித நீர் ஊற்றப்பட்டது.

    பாரம்பரியமான முறையில்  25 அடி உயரத்தில்  உருவாக்கப்பட்டுள்ள  சிலைகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றிக்கு நேற்றையதினம்  கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் 4000 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான பெரியசாமி ஆலயம் காட்டுப்பகுதியில் உள்ளது. பழமை மிக்க இந்த கோயிலுக்கு தனி கட்டிடமோ, கற்சிற்பங்களோ எதுவும் கிடையாது. மணல் சிற்பங்கள் மட்டுமே சிறிய அளவில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

    முதல்முறையாக இங்கு பெரிய அளவிலான கிராம தெய்வ சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் புதுச்சேரியில் வில்லியனூர் கிராமத்தில் டெரகோட்டா கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் ஓராண்டாக கைகளால் மட்டுமே உருவிக்கினார்கள்.

    25 அடி உயரத்தில் 100 டன் மண் கொண்டு வைக்கோல், இரும்பு, அலுமினியம், தாமிரம் போன்றவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 800 டிகிரியில்  சிற்பங்கள் சுடு வைக்கப்படும். ஆனால் இந்த சிற்பங்கள் அனைத்தும் 1200 டிகி வேக வைத்துள்ளனர்.இதனால் கோயில் இருக்கும் பகுதியில் இடி விழாது. விழுந்தாலும் இந்த சிலைகள் தாங்கி பூமிக்குள் செலுத்தும். மேலும் கிருமி நோயுடன் வந்தால் இந்த சிலை இழுத்துக் கொள்ளும்.

    108 கிராம தெய்வங்கள் உள்ளன.ஆனால் இவை  படிப்படியாக மறைந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியின் துவக்கமே இது. கம்பி, சிமெண்ட் என எதுவும் சேர்க்காமல்  மணல் கொண்டே பாரம்பரிய முறையில் கைளால் சிலைகள்  உருவாக்கப்பட்டுள்ளன.பாரம்பரிய இக்கலையை  கைவிடப்படக்கூடாது என்பதற்காக ஓராண்டாக இந்த சிலைகள் உருவாக்கி இருப்பதாக கோயில் அறங்காவல் குழுவினர் தெரிவித்தனர்.







    Leave A Comment